/* */

பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு

பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு
X
கொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரை போலீசார் மீட்டனர்.

பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில், நகைக்கடை நடத்தி வருபவர் கருப்பண்ணன் (65). இவர் கடந்த 26ம்தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 3 பேர், கருப்பண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் இருந்த 105 சவரன் தங்க நகைகளையும், 9 கிலோ வெள்ளி பொருட்களையும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச்சென்றனர்.

இதுமட்டுமின்றி,கருப்பண்ணனின் வீட்டு வாசலில் நின்றிருந்த சொகுசு காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் நகர போலீசார், வழக்கு பதிந்து, 9 பேர் கொண்ட தனிப்படை குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கும் சென்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற போது எடுத்துச்சென்ற கார் பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் தனியாக கடந்த 3 நாட்களாக நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் காரை மீட்டு, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் காருடன் வெளி மாவட்டத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக கூறி, பல்வேறு மாவட்டங்களில் போலீசார் முகாமிட்டு தேடி வந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கார் நிறுத்தப்பட்டிருந்தது பொதுமக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Nov 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை