/* */

பெரம்பலூர் பகுதியில் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பெரம்பலூர் பகுதியில் கடும் பனி மூட்டத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் பகுதியில்  பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பெரம்பலூர் நகரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது. மேலும் மலைப்பிரதேசங்களை போன்று குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

இந்த கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர். மேலும் பெரம்பலூரை ஒட்டிய திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அதிக பனிமூட்டம் நிலவியதை தொடர்ந்து வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது.

Updated On: 23 Jan 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்