/* */

சிறுபான்மையினர் இன மாணவ மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை

சிறுபான்மையினர் இன மாணவ , மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். -மாவட்ட ஆட்சியர்

HIGHLIGHTS

சிறுபான்மையினர் இன மாணவ மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை
X

கோப்பு படம் 

சிறுபான்மையினர் இன மாணவ , மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தகவல்.

இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) 30.11.2021-க்குள் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பித்தனை சம்மந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று அவசியமில்லை எனவும், ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.

அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையதளத்தில் 30.11.2021-க்குள் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையினர் மாணவ-மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2021 1:59 AM GMT

Related News