வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூர் அரசு கல்லூரி மாணவ -மாணவிகள்.

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலை பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags

Next Story
ai in future agriculture