பெரம்பலூர் அருகே தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகன் கைது

தந்தையை கொலை செய்த மகன் வேலவன்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் எலந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் கொல்லுப் பட்டறை நடத்தி வரும் இவருக்கு தையல்நாயகி, ராணி என்ற இரு மனைவிகள் உள்ளனர்.
தையல்நாயகிக்கு வேலவன், வெற்றிவேல் என்ற இரு மகன்களும்,ராணிக்கு கதிர் என்ற மகனும் உள்ளனர்.தையல்நாயகி சிறுவாச்சூரில் தனியாக வசித்து வருகிறார்.மற்ற அனைவரும் எலந்தலப் பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இதனிடையேகடந்த ஆண்டு வேலவனுக்கு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
மீனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வேலவன் அடிக்கடி அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று மீனாவிற்கும், வேலவனுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு இருந்த முருகன் தன்னுடைய மகன் வேலவனை கண்டிக்கவே வேலவன் தான் கையில் வைத்திருந்த கத்தியால் முருகனை சராமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தந்தையை கொலை செய்த மகன் வேலவனை போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu