பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர்  மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும்   கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா பேசுகையில்

பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2021 அக்டோபர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 568 செ.மீ, பெய்த மழையளவு 805.36 செ.மீ, ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 83013 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலமாக பரப்பு அதிகரித்தல் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம். மரவள்ளி, மஞ்சள் மற்றும் இதர காய்கறி பயிர்கள் 2021-ம் ஆண்டிற்கு 35741 எக்டர் பரப்பு இலக்காக பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் - தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் நீர் ஆதாரத்தை உருவாக்குதல்.

குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு, சிப்பம் கட்டும் அறை, இயந்திரமயமாக்குதல் போன்ற பணிகளும், தமிழ்நாடு நீர்பாசன வேளாண் நவீன மயமாக்கல் திட்டத்தில், பராம்பரியத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களுக்கு பல்வகைப்படுத்தும் இனத்தில் கத்தரி, மிளகாய் சொட்டுநீர் பாசனம் ஆகிய இனங்களில் பொருள் இலக்காக 19 எக்டர் மற்றும் நிதி இலக்காக 12.00 இலட்சமும் பெறப்பட்டு பொருள் இலக்கில் 5.66 எக்டர் பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம். மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் மையம் அமைத்தல். உயிரி கட்டுப்பாடு ஆய்வகம் அமைத்தல். விதை சேமிப்பு கிடங்கு அமைத்தல். ௲ரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் அமைத்தல். வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் - தனி நபர் விவசாயிகளுக்கு மானியம். வட்டார அளவிலான வாடிக்கையாளர் இயந்திர சேமை மையம் அமைத்தல், கிராம அளவிலான வாடிக்கையாளர் இயந்திர சேவை மையம் அமைத்தல்.

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், துறை வாரியான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விவசாயிகள் தரப்பில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு மின்சாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலவச விவசாய மின் இணைப்பு 100 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், பால் கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், கூட்டுறவுத்துறையின் மூலமாக நகைக்கடன் வழங்கப்பட்டு வருவதற்கு கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் அனைவரும் நன்றி தெரிவித்தனர். கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா. அங்கயற்கண்ணி. வேளாண்மை இணை இயக்குநர் .ச. கருணாநிதி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க. பூவலிங்கம் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story