அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்
X

அம்பேத்கர்

அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் 2021- ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

2021- ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதானது 2022ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள்.

டாக்டர்.அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதினைப் பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர்-621 112 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?