/* */

பெரம்பலூரில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

பெரம்பலூரில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி சக காவலர்களால் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் உயிரிழந்த  தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி
X

உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்த 1993-ம் பேட்ச் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து ராஜேந்திரன் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள்-1993-ம் பேட்ச் சார்பாக ரூபாய் 7,27,500/- சேகரித்து அதனை பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி தலைமையில் ராஜேந்திரன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ,காவல் ஆய்வாளர் மற்றும் 1993-பேட்ச் காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டார்கள். மேலும் உதவி தொகை செய்த 1993-பேட்ச் காவல்துறையினரின் சேவை மனப்பான்மையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதுடன், தமிழகம் முழுவதும் உள்ள 1993-பேட்ச் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தார்.

Updated On: 3 March 2022 4:44 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!