பெரம்பலூரில் தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சிக் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில், இன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும், ஊதியத்திற்காக வழங்கப்பட்ட அரசாணை எண்-20 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் 04-02-2021-ஐ திருத்தம் செய்து, ஊதியத்துடன் ரூ.1400 சேர்த்து குறைந்தபட்ச ஊதியமாக ரூ 6,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சி தூய்மை காவலர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags

Next Story