/* */

பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
X

பெரம்பலூர் நகர் பகுதியான வடக்கு மாதவி சாலையில் உள்ள கணபதி நகரில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். மீண்டும் 21 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரம்பலூர் நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 22 Oct 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!