/* */

பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம்

பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க வந்தார் இரத்த கொடையாளர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட் டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்களுக்குபோலீசார் தலா ரூ .200 அபராதம் விதித்து வருகின்றனர் . இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுக்க ஒரு தனியார் (துளிர்) அறக்கட்ட ளையை சேர்ந்த சூரியகுமார் , வேப்பந்தட்டை பகுதியில் ஒரு ரத்த கொடையாளரை அழைத்து வருவதற்காக நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில், கோனேரிபாளையம் அருகே சென்றார் .

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவர்களை வழிமறித்து , அவர்களில் ஒருவருக்கு முககவசம் அணியவில்லை என்று கூறி ரூ .200 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது . ஆனால் அவர்கள் 2 பேரும் முககவசம் அணிந்திருந்ததாகவும் , ஆனால் ரசீதில் அபராதம் எதற்காக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது . முககவசம் அணிந்தும் போலீசார் அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், முக கவசம் அணிந்தும் அபராதம் கட்டிய மக்கள் நலன் கருதி பொதுப்பணியை மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் சூரியகுமார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் பெட்டியில் போட்டுள்ளேன் இதற்கு தீர்வு வரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Jan 2022 1:40 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்