/* */

பாபர் மசூதி இடிப்பு தினம்: பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் SPDI கட்சியினர் பாபர் மசூதிக்கு நீதி கேட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

பாபர் மசூதி இடிப்பு தினம்: பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் SPDI கட்சியினர் பாபர் மசூதிக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டிசம்பர் 06 இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு தினமாகும். மசூதி இடிக்கப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் SPDI கட்சியினர் பாபர் மசூதிக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது இப்ராஹிம் தொகுப்புரை வழங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் Dr. A. முஹம்மது ரபீக், மாவட்ட துணைத்தலைவர் M. முஹம்மது பாரூக் , மாவட்ட செயலாளர் M. அகமது இக்பால் , மாவட்ட பொருளாளர் Dr. M. ஜியாவுதின் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி, SPDI கட்சியின் பெரம்பலூர் தொகுதி தலைவர் முஹம்மது ரபிக், பெரம்பலூர் தொகுதி செயலாளர் A.சித்திக்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பெரம்பலூர் ஒருங்கிணைப்பாளர் என். செல்வதுரை, கிறிஸ்து நல்லென்ன இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரினோ பாஸ்டின் , பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் F.செய்யது அபுதாஹிர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் திருச்சி மண்டல தலைவர் S.அமீர் பாஷா எழுச்சி உரையாற்றினார். இறுதியாக SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் A. அப்துல் கனி நன்றியுரையாற்றினார்.

Updated On: 6 Dec 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  3. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  4. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  8. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  9. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்