/* */

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு போட்டி

தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களிடையேயும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு போட்டி

HIGHLIGHTS

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு போட்டி
X

இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஜனவரி-25 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்பேரில் வாக்காளர்களிடையேயும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வும், கல்வியும் வழங்கிடும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 9 முதல் 12 வகுப்பு பள்ளி மாணாக்கர் அளவிலும், கல்லூரி அளவிலும் தேர்தல் தொடர்பான கருத்துருக்களை மையமாக கொண்டு ஓவிய போட்டிகள், சுவரொட்டி உருவாக்கம் செய்தல், ஒரு வரி முழக்கம் உருவாக்கம், பாட்டு போட்டி, குழு நடன போட்டிகள் மற்றும் கட்டுரை போட்டிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் எதிர்வரும் 15.12.2021 அன்று துவங்கி 25.12.2021 அன்று வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.

இது தவிர 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 'ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு" என்ற தலைப்பில் தமிழில் 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் தங்களது ஒரு பக்க கட்டுரையை எழுதி www.elections.tn.gov.in/sveep2022/ என்ற இணைய முகவரியில் 26.12.2021-க்குள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், இந்த தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Dec 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  3. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  4. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  6. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  7. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு