/* */

குரும்பலூர் அருகே 80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி

குரும்பலூர் பேருராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, ஓடை நீரில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

குரும்பலூர் அருகே  80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி
X

மூதாட்சி இறந்தது குறித்து விசாரித்த கிராமத்தினர். 

பெரம்பலூர் அடுத்துள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவர், நல்லம்மாள், வயது 80, இவரது கணவர் சுப்பு. இவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில், இவர்களுக்கு பிள்ளைகள் யாரும் இல்லை. நல்லம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நல்லம்மாளை காணவில்லை. அருகே இருந்தவர்கள் தேடிப்பார்த்து விசாரித்து வந்த நிலையில், அதே பாளையம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் ஓடை பகுதியில், பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியான நல்லம்மாள் என்பது தெரியவந்தது. நல்லம்மாள் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மூதாட்டி உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்