பெரம்பலூர் வட்டத்தில் நிலம் தொடர்பான 15 பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் வட்டத்தில் நிலம் தொடர்பான 15 பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் நிலம் தொர்பான பிரச்சினைகளை தீர்க்க வருவாய்த்துறை, காவல் துறையினர் இணைந்து சிறப்பு முகாம் நடத்தினர்.

பெரம்பலூர் வட்டத்தில் நிலம் பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

மேலும் மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரஞ்சனா, காவல் உதவி ஆய்வாளர் முகமது அபுபக்கர் மற்றும் தலைமைக் காவலர்களும், பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் 20 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business