/* */

ஓராண்டு நிறைவு: அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

ஓராண்டு நிறைவு: அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்
X

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராதாகிருஷ்ணன் சாலையில் காரில் சென்ற போது, திடீரென காரை நிறுத்தி அந்த வழியாக வந்த 29c பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு செய்தார். இதைப்பார்த்து பேருந்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பேருந்திலேயே சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக பயணம் செய்தார்.

அப்போது பயணம் செய்த பெண்களிடம் இலவச பேருந்து பயணத்திட்டம் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கிறது என கேட்டறிந்தார். இதற்கு பெண் பயணிகள் இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம் என கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்திற்குச் சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On: 7 May 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!