/* */

கொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ் கொரோனாவால் உயிரிழப்பு..!

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ்கொரோனாவால் உயிரிழப்பு.

HIGHLIGHTS

கொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ் கொரோனாவால் உயிரிழப்பு..!
X

வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஆரூண் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது51). வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந்தேதி சாந்தகுமாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். சாந்தகுமாரியின் சொந்த ஊர் திருத்தணி ஆகும். இறந்த நர்சு சாந்தகுமாரிக்கு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நர்சுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே குடியாத்தம், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 2 நர்சுகள் இறந்தனர். 3-வதாக சாந்தகுமாரி பலியாகி உள்ளார்.

Updated On: 8 Jun 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  2. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  3. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  5. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  6. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  7. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  9. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  10. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...