தமிழகத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் 9 இடங்களில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
X
தமிழ்நாடு முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

தமிழகத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 4 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைதான நிலையில், தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.

வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மயிலாடுதுறை ,காரைக்கால் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக ஆதாரங்களை தேடி வருகிறார்கள். எந்த வழக்கு தொடர்பான சோதனை என்பது குறித்து அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story