/* */

புதிய ரேஷன் அட்டைதாரர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் கார்டுளுக்காக 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.3 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன- அமைச்சர் தகவல்

HIGHLIGHTS

புதிய ரேஷன் அட்டைதாரர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்
X

புதிய ரேஷன் அட்டைதாரர்கள்... 

புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குடிமக்களின் முக்கிய ஆதாராமாக பயன்படும் ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இதில் நாள்தோறும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அனைவருக்கும் விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த செயல்முறையும் தொடர்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் கார்டுளுக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 3 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன .

மேலும் மற்ற விண்ணப்பங்களுக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி புதிய ரேஷன் அட்டைதாரர்கள் இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

Updated On: 1 Aug 2021 1:53 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  2. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  7. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  8. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  10. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...