/* */

குமாரபாளையம் வாரச்சந்தை இயங்காது: ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக, குமாரபாளையம் வாரச்சந்தை, மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என்று, நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் வாரச்சந்தை இயங்காது: ஆணையாளர் அதிரடி அறிவிப்பு
X

இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்று அலை 2 மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி உட்பட்ட பகுதிகளிலும், கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த சூழலை கருத்தில் கொண்டு, மக்கள் ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்கும் வகையில், குமாரபாளையம் பகுதியில், வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் இயங்கிவரும் வெள்ளிச்சந்தை, மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்பை, பிளக்ஸ் பேனரை மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், வாரச் சந்தை காய்கறி வியாபாரிகளும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 30 April 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...