Begin typing your search above and press return to search.
நாட்டுப்புற பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு
வேதாரண்யத்தில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈடுபட்டார்.
HIGHLIGHTS
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அதன்படி நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு, மண் மனம் மாறாத நாட்டுப்புற இசை மூலம் , பாடல்களை பாடி , கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
பாடல்களை பள்ளி ஆசிரியர் தமிழ்மணி என்பவர் எழுதி நாட்டுப்புற தெம்மாங்கு கலைஞர்ளால் பாடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.