அம்மா மினி கிளினிக் உடைத்து சேதம்

நாகை மாவட்டம் அம்மா மினி கிளினிக் உடைத்து சேதப்படுத்திய நபர் மீது ஊராட்சி தலைவர் போலீசில் புகார் செய்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அவுரிக்காடு கிராமத்தில் மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவர் மது போதையில் அம்மா கிளினிக் கின் முன் புறம் இருந்த டிஜிட்டல் பேனர் மற்றும் பெயர் பலகையை கிழித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்

இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் புகார் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future