/* */

துர்கா பரமேஸ்வரி தலைமையில் சீர்காழி நகர் மன்றத்தின் முதல் கூட்டம்

தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் சீர்காழி நகர் மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

துர்கா பரமேஸ்வரி தலைமையில் சீர்காழி நகர் மன்றத்தின் முதல் கூட்டம்
X

சீர்காழி நகராட்சி முதல் கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடந்தது.

சீர்காழி நகர்மன்ற முதல் கூட்டம் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நன்றி அறிவிப்பு கூட்டமாக நடைபெற்ற இந்த முதல் கூட்டத்திலேயே புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

தே.மு.தி.க. உறுப்பினர் ராஜசேகரன் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் கடந்த 40 ஆண்டுகளாகவே குடிசைப் பகுதிகள் உள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றப்படுவதில்லை என குற்றஞ்சாட்டினார். நகரில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகரமைப்பு ஆய்வாளர் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில், 62 பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக வனத்துறை சார்பில் 1200 சதுர அடி பூங்கா பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார். இவை அனைத்தும் குறிப்புகள் எடுக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பெற்று ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தெரிவித்தார்.

Updated On: 24 March 2022 2:32 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா