Begin typing your search above and press return to search.
வழக்கறிஞர்களிடம் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
நாகப்பட்டினத்தில் வழக்கறிஞர்களிடம் வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வர்த்தகர்கள், மீனவர்கள், விவசாயிகள் என தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன்படி இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் ,வழக்கறிஞர்களிடம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பார் கவுன்சில் சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர், பானை சின்னத்துக்கு ஆதரவு அளித்து தனக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.