/* */

இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க கோரிக்கை

ரமலான் நோன்பு தொடங்க உள்ளதால் வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென உலமாக்கள் சங்கத்தினர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

கொரோனா வைரசின் 2 வது அலை தமிழகத்தில் அதிவேகமேடுக்க தொடங்கியுள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணிக்குள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற 13 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு கால பண்டிகை தொடங்க உள்ளதால் உலமாக்கள் சபையினர் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்று நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அவர்கள், ஊரக வளர்ச்சி துறை நேர்முக உதவியாளர் மெய்தீன் பிச்சையை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது நோன்பு காலத்தில் வழக்கமாக இரவு தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளி வாசல்களை இரவு 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 10 April 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!