/* */

நாகையில் வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

நாகை அருகே இருச்சக்கர வாகனமும் ஆட்டோவும் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாகையில் வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
X

விபத்தில் பலியான சசிக்குமார்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி, கீழத்தெருவை சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் சசிக்குமார் (வயது 26), கூலி தொழிலாளி. இவருக்கு திருமாணமாகி 5 மாதம் ஆகிறது. நேற்று, கீழ்வேளூரில் தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்கி கொண்டு, கோகூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பாண்டி சோழமங்கலம் வளைவில் செல்லும் போது, எதிரே இலுப்பூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சசிக்குமாருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த சசிக்குமாரை அக்கம்பக்த்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சசிக்குமார் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து, கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Sep 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  7. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  10. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்