/* */

நாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

நாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

நாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
X

நாகை அருகே சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் சுற்றுலா வந்தனர்.

நாகூர் தர்காவில் வழிபாடு முடிந்த பின்னர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றனர். அப்போது கருவேலங்கடை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் தலைகீழ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். தலைகீழ் கவிழ்ந்த வேனில் சிக்கியவர்களை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மீட்டு இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விபத்து நடந்த வழியாக நண்பர்களோடு வேளாங்கண்ணி சுற்றுலா சென்ற மருத்துவர் ஞானசேகர் என்பவர் அனைவருக்கும் முதலுதவி பார்த்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பும் வரை உதவி செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 July 2021 6:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்