/* */

நாகை அருகே சார்-பதிவாளர் அலுவலகம் இடம் மாற்றத்தை கண்டித்து சாலை மறியல்

நாகை அருகே சார்பதிவாளர் அலுவலகம் இட மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் திருப்பூண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாகை அருகே சார்-பதிவாளர் அலுவலகம் இடம் மாற்றத்தை கண்டித்து சாலை மறியல்
X

நாகை சார்பதிவாளர் அலுவலகம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டியில் 1888ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் தொடர்ந்து 138 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இருபத்தி எட்டு கிராம மக்கள் திருமண பதிவு மற்றும் சொத்து பதிவு உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்ள மையப் பகுதியாக இந்த இடம் விளங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை கீழ்வேளூருக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பூண்டியில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Updated On: 4 Jan 2022 3:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  4. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  7. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  8. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  9. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  10. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?