/* */

எட்டுக்குடி முருகன் கோவிலில் வெள்ளி தேர் உற்சவம்

எட்டுக்குடி முருகன் கோவிலில்  வெள்ளி தேர் உற்சவம்
X

நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் 9ம் நாளான வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது.

முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவானது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் இந்து சமய அறநிலை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி கொரனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கோவிலின் முகப்பு பகுதி கதவு பூட்டப்பட்டு, உட்பிரகாரத்தின் உள்ளே வெள்ளி தேர் சிவாச்சாரியர்களால் இழுக்கப்பட்டது.

வெள்ளித் தேரில் ஆறுமுக வேலவர், மேளதாளங்கள் முழங்க பல வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். முழு ஊரடங்கு காரணமாக கோவில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Updated On: 26 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?