/* */

நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
X

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா, வேளாங்கன்னி அருகே செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை குப்பு முத்து மகன் செல்வம். இவர் கடந்த மாதம் கீழ்வேளூர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கிற்காக கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

மேலும் செல்வம் மீது கீழையூர், வேளாங்கன்னி, வெளிப்பாளையம் சீர்காழி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, சாராய வழக்குகள் உள்ளது. இதை தொடர்ந்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன் ஆகியோர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ்.

சூப்பிரண்டு செல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையில் இருந்த செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 July 2021 3:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...