/* */

நாகை மாவட்டம் திருக்குவளையில் சாலை வசதி கோரி மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் திருக்கு வளையில் சாலை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நாகை மாவட்டம் திருக்குவளையில் சாலை வசதி கோரி  மறியல் போராட்டம்
X

நாகை மாவட்டம் திருக்குவளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்துள்ளது வாழக்கரை கிராமம். இந்த கிராமத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து இன்று வாழக்கரை கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருக்குவளை வேளாங்கண்ணி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 100 நாள் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் வேலை வழங்க கோரியும், ஜீவா நகரில் சாலை அமைத்து தர வலியுறுத்தியும், மேலகட்டளையில் உள்ள மயான சாலையை சீரமைத்து தர வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சாலை மறியல் போராட்டத்தால், திருக்குவளை- வேளாங்கண்ணி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை வட்டாட்சியர் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

உடனடியாக வாழக்கரை கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 11 Oct 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு