/* */

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது : 2 டிராக்டர், 1 ஜே.சி.பி பறிமுதல்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 டிராக்டர், 1 ஜே.சி.பி. இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே பூலாங்குடி கிராமம் மஞ்சங்கன்னி வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக கீழ்வேளுர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மஞ்சங்கன்னி வாய்க்காவில் 2 டிராக்டரில் 4 பேர் களிம்பு மண் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, குருக்கத்தி, அய்யப்பன்,பூலாங்குடியைச் சேர்ந்த கந்தகுமார் குருமணங்குடி மாரிமுத்து கீழ்வேளூர், வெள்ளந்திடல் ராஜா என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு. செய்து அவர்களை கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 July 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு