/* */

நாகை கீழவெண்மணியில் 53ஆவது ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விளைநிலங்களை ஒப்படைக்க நினைக்கிறது : கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டி

HIGHLIGHTS

நாகை  கீழவெண்மணியில் 53ஆவது ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
X

விவசாயிகளை முற்றிலும் அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விளைநிலங்களை ஒப்படைக்க நினைக்கிறது மத்திய அரசு என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழவெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டதற்காக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் , பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் ஒரே குடிசையில் வைத்து ஒன்றாக எரித்துக் கொல்லப்பட்டனர் .இந்த சோக சம்பவத்தின் 53ஆவது ஆண்டு நினைவு தினம் கீழவெண்மணியில் இன்று அனுசரிக்கப்பட்டது. 44 பேர் இறந்துபோன குடிசை இருந்த இடத்தில் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நினைவு தூணில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் G. ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் அ.செளந்தரராஜன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: இன்றைக்கும் தமிழகத்தில் சாதிய கொடுமைகள் ஒழிந்த பாடில்லை என்றும், சாதிய சக்திகளை எதிர்த்து பல்வேறு அறிஞர்கள் இடதுசாரிகள் அனைத்தும் குரல் கொடுத்தாலும் கூட சாதிக் கொடுமை தீண்டாமை கொடுமை என்பது முடிந்தபாடில்லை என்றார். மத்திய அரசு மிக மோசமான ஆட்சியை நடந்தி வருவதாகவும், டெல்லியில் விவசாயிகள் போராடிய பிறகுதான் அந்த மூன்று சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு உருவாகி இருக்கிறது.

அந்த போராட்டத்தின் மூலமாக எத்தனையோ வகையிலும் முயற்சி செய்து கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த விவசாயிகள் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மோடி மண்டியிட வேண்டிய கட்டாய நிலை உருவாகி இருக்கிறது என்றார். மேலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது மத்திய அரசு எனவும், தொழிலாளர்கள் விவசாயிகள் தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் காரணமாக மோடி அரசுக்கு ஒரு இறங்கு முகமாக தோல்வி முகம் உள்ளது. இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சேர்ந்து மகத்தான போராட்டத்தை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் மழை வெள்ளம், நோய்த்தொற்றை பார்த்தும் இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட நிவாரணம் மத்திய அரசு கொடுக்க மறுக்கிறார்கள். தமிழகத்துக்கு இதுவரையிலும் ஒரு ரூபாய் கூட மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் எனவே மத்திய அரசு உடனடியாக நிதியை ஒதுக்கி தர வேண்டும் குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படாத ஒரு அமைப்பாக உள்ளது எனவே போதிய நிதி ஒதுக்கி முழு அதிகாரமுள்ள ஆணையமாக செயல்படுத்தினால் மட்டுமே தவறுகளை பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் என்றார்.

கடந்த ஆட்சியில் எவ்வளவு போராடினாலும் கிடைக்காததால போராட வேண்டியிருந்தது இந்த அரசிடமும் கேட்டிருக்கிறோம் நிச்சயமாக கிடைக்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுத்தவரை அரசியல் கூட்டணியாக கூட்டணிக்காக எங்களின் போராட்டத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்த அவர், விவசாயிகளை முற்றிலும் அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விளைநிலங்களை ஒப்படைக்க மத்திய அரசு நினைக்கிறது என்றார்.




Updated On: 25 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்