/* */

நாகை அருகே மதுபோதையில் மூதாட்டியை கொலைசெய்த முதியவர் கைது

போதையில் 62 வயது மூதாட்டியை அடித்துக்கொலை செய்த 65 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

நாகை அருகே  மதுபோதையில் மூதாட்டியை  கொலைசெய்த முதியவர் கைது
X

மூதாட்டியை  மதுபோதையில் கொலை செய்ததால்  கைது செய்யப்பட்ட முதியவர் சீனிவாசன் (65).

நாகை அருகே போதையில் மனநலம் பாதித்த 62 வயது மூதாட்டியை கல்லால் அடித்துக் கொலை செய்த 65 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரியை சோ்ந்த மாணிக்கம் மனைவி அம்பிகா (62). கணவர் இறந்து போனதால், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அம்பிகா, திருக்குவளையை அருகேயுள்ள நத்தபள்ளம் கிராமத்தில், தனது சகோதரா் ராஜேந்திரன் வீட்டின் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார். இவா் நேற்று தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து, திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், நத்தப்பள்ளம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த முதியவர் வீ.சீனிவாசன் (65) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தான், மது போதையில் இருந்த பொழுது, அம்பிகாவிடம் சில்மிஷம் செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Updated On: 10 Sep 2021 3:58 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  2. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  9. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  10. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...