/* */

கோகூர் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் எளிய முறையில் நடைபெற்றது

நாகப்பட்டினம் அருகே கோகூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பெரிய தேர் பவனி ரத்து

HIGHLIGHTS

கோகூர் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் எளிய முறையில் நடைபெற்றது
X

கோகூர் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் எளிய முறையில் நடைபெற்றது

நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம் நூற்றாண்டுகள் பழமையானதாகும், கடந்த ஆண்டு ஊரடங்கால் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் வழிபாடுகள் நடைபெறவில்லை. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கடந்த 5-ந்தேதியிலிருந்து முதல் ஆலயங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த வருடம் இன்று கோகூர் புனித அந்தோனியார் கோவில் இருந்து கொடிமரத்திற்கு, கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பங்கு தந்தை ஜான் பீட்டர் அவர்களால் புனிதம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் 10ம் நாள் பெரிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் பெரிய தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெரும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 21 July 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு