வேளாங்கண்ணியில் இயேசு உயிர்த்தெழும் தத்ரூப காட்சி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நள்ளிரவு ஈஸ்டர் திருநாளையொட்டி இயேசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகள் தொடங்கின. பின்னர் இயேசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ''பாஸ்காஒளி''ஏற்றப்பட்டது. பின்னர் பிரார்த்தனைகள் தொடங்கின. இதில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தனர்.

இரவு 12 மணி அளவில் வானவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவைகொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்புதிருப்பலி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture