/* */

நாகை அருகே அரசு லாரி திருட்டு: இரண்டு இளைஞர்கள் கைது

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் லாரியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாகை அருகே அரசு லாரி திருட்டு: இரண்டு இளைஞர்கள் கைது
X

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நிறுத்தி வைத்திருந்த லாரியை திருடிச் சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், காட்டூர் கலையரசன் என்பவர் கீழ்வேளூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தனக்கு சொந்தமான லாரியை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார்.

லாரியை வழக்கமாக நிறுத்தும் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கிடங்கில் நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று காலை லாரி காணவில்லை என அங்குள்ள ஊழியர்கள் ஓட்டுனருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து லாரி ஓட்டுனர் இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் தேவூர் அருகே வெண்மணி ஆர்ச் அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர்,

அவ்வழியாக லாரியில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில் லாரியை திருடி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் கீழ்வேளூர் அருகே இறையான்குடி, சந்திர படுகை பகுதியைச் சேர்ந்த தனசேகரன், வலிவலம் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பதும் தெரிய வந்தது.

பின்னர் லாரியை பறிமுதல் செய்த கீழ்வேளூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Sep 2021 3:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...