/* */

கீழையூரில் தோட்டபயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மழையால் சேதமடைந்த தோட்டப் பயிர்களாளுக்கு உரிய கணக்கெடுப்பு எடுத்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கீழையூரில் தோட்டபயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X
மழையால் அழுகிய கத்தரிக்காய்.

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் தோட்டக்கலை பயிர்களான கத்தரி, கொத்தவரை, புடலை, பாகல், பீர்க்கங்காய், மரவள்ளி உள்ளிட்ட காய்கறிகளை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெருமளவில் பயிர் செய்து இருந்தனர்.

தற்போது பெய்த வரலாறு காணாத கனமழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்தன. இதனால் உரம் மற்றும் மருந்து ஆள் கூலி ஆகிய செலவுகளை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து இதுவரை தோட்டக்கலை அதிகாரிகளோ அல்லது வேளாண் துறை அதிகாரிகளோ எந்த ஒரு ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 12 Dec 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  2. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  8. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்