/* */

நாகை மீனவர் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன்

நாகையில், நாட்டுப் படகு ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது.

HIGHLIGHTS

நாகை மீனவர் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன்
X

மீனவர் வலையில் சிக்கிய அதிசய மீன். 

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி முகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினம்தோறும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இன்று மீன் பிடித்து கரைக்கு மீனவர்கள் திரும்பிய பொழுது ஒரு நாட்டுப் படகு ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது. தலை அச்சு அசல் முதலை போலவும், உடல் முதலையின் கடினமான தோல் போலவும் இருந்துள்ளது.

இதனை சக மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் சிலர், இது மீன் இல்லை என விமர்சனமும் செய்துள்ளனர். 3 அடி நீளமும் 10 கிலோ எடையும் கொண்டிருந்தது. கரைக்கு கொண்டு வந்து வலையில் இருந்து எடுக்கும்போது மீன் உயிரோடு இருந்ததாகவும் பதப்படுத்துவதற்காக, ஐசில் வைத்தபோது இறந்துவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். ஒருவழியாக இந்த முதலை மீனை சமைத்தவுடன் ருசியை அறியலாம் என ஒருவர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்.

Updated On: 30 Dec 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...