/* */

நாகை அருகே பெண்களின் ஆவேசத்தால் ஓட்டம் பிடித்தது சாராய கும்பல்

நாகை அருகே பெண்களின்ஆவேச போராட்டத்தினால் சாராய கும்பல் பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தது.

HIGHLIGHTS

நாகை அருகே பெண்களின் ஆவேசத்தால் ஓட்டம் பிடித்தது  சாராய கும்பல்
X

நாகை அருகே சாராய கும்பலை பெண்கள் அடித்து விரட்டினர்

நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஊராட்சி மூங்கில்குடி கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாராய விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் பகுதி பெண்கள் இரு தினங்களுக்கு முன் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் போலீசார் தரப்பில் இருந்து இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று ஆவேசமடைந்த மூங்கில்குடி கிராம பெண்கள், அந்த பகுதி மயானம் அருகே பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்த கும்பலை அடித்து விரட்டினர். அப்போது சாராய விற்பனை செய்த கும்பல் சாராய பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கிராம பெண்கள் சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் வீசி எறிந்து அதனை உடைத்தனர். சாராயம் விற்ற கும்பலை பெண்கள் விரட்டியடித்து சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்து ஆவேசமாக உடைக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி உள்ளது.

Updated On: 13 Oct 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்