/* */

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 34). நாகை வெளிப்பாளையம், வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 38).

இவர்கள் இருவரும் கீழ்வேளூர் அருகே தேவூர், தெற்காலத்தூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் மீது சாராயம் விற்பனை தொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சத்யா, முத்துலட்சுமி மீது சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் , துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன்,ஆகியோர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர்.

இதன் பேரில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கீழ்வேளூர் போலீசார் திருவாரூர் சிறையில் இருந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 29 Jan 2022 2:47 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!