/* */

தலித் குடும்பங்கள் வெளியே வரமுடியாமல் அடைத்து வைப்பு !

தலித் குடும்பங்கள் வெளியே வரமுடியாமல் அடைத்து வைப்பு !
X

நாகப்பட்டினம் அருகே குடிநீர் குழாய் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த 7 தலித் குடும்பங்கள் வெளியே வரமுடியாத வகையில் கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் வசிக்கும் கள்ளத்திடல் பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் வாழக்கரையில் இருந்து குடிநீர் குழாய் பதித்து பணியை தொடங்கினர். இந்நிலையில் கோவில்பத்து தெரு அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்கு அதே பகுதியை சேர்ந்த சபாநாதன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரமேஷ் தரப்பிற்கும், சபாநாதன் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டு ரமேஷ் மீது திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த சபாநாதன் கள்ளத்திடல் பகுதியில் வசிக்கும் ரமேஷ் உட்பட 7 குடும்பத்தினர் செல்லும் பாதையை கம்பி வேலி கொண்டு அடைத்துள்ளார். ஆற்றங்கரையை ஒட்டி கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டு இருப்பதால் 7 குடும்பத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோர் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதில் குடிநீர் எடுத்து செல்லவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தாங்கள் தலித் மக்கள் என்பதால் கம்பி வேலி கொண்டு அடைத்து தகாத வார்த்தைகள் பேசி வருவதாக சபாநாதன் மீது அப்பகுதி மக்கள் திருக்குவளை போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வேலி அடைக்கப்பட்டுள்ள இடத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Updated On: 10 March 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்