/* */

விடுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

விடுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
X

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தங்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 27ம் தேதி வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெற்கு தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவருடன் கோவை மாவட்டம் குப்பிபாளையம் செம்மண் கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த ராணி, மற்றும் 30 வயது மதிக்கதக்க பெயர் தெரியாத ஆண் , 10 வயது ஆண் குழந்தை, ஏழு வயது பெண் குழந்தை ஆகியோரும் ஒரு நாள் அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில் ஒரு நாள் முடிந்தும் அந்த நபர்கள் அறையை காலி செய்யவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அறையின் வெளி பகுதி தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ராணி இறந்து கிடந்தார். மற்ற நான்கு பேரையும் காணவில்லை. இது குறித்து வேளாங்கண்ணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அறையின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராணி மூக்கில் ரத்தம் மற்றும் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விடுதியில் போலீசார் விசாரணை செய்து ராணி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 1 March 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!