/* */

மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசிய கொடியால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசியகொடியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசிய கொடியால் பரபரப்பு
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி தலைகீழாக பறந்த காட்சி.

அரசு விதியின்படி முக்கியமான அரசு அலுவலகங்களில் தினமும் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கொடியை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணம் தேசியக்கொடி தலைகீழாக பறந்து கொண்டிருந்தது தான்.

இது குறித்து ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணப்பாறை நகராட்சி அலுவலகமே பரபரப்புக்குள்ளானது. ஓடி வந்த ஊழியர்கள் தேசிய கொடியை அவசர அவசரமாக கீழே இறக்கினர். பின்னர் உரிய மரியாதை செலுத்தப்பட்டு தேசிய கொடி சரி செய்யப்பட்டு மீண்டும் கம்பத்தில் ஏற்றப்பட்டது.

தேசிய கொடி தலைகீழாக பறக்க விடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைகீழாக தேசியக்கொடி ஏற்றப்பட்டதற்கு யார்? காரணம் என கேட்டால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.


Updated On: 10 Nov 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்