/* */

ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது கனிமொழி எம்.பி.,

ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது    கனிமொழி எம்.பி.,
X

2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி பிடிப்பது உறுதி எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி தூத்துக்குடி வந்தார்.தொடர்ந்து விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி பிடிப்பது உறுதி எனவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது என்பது தெரிகிறது. இந்த அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை,சுய உதவிக் குழுக்கள் கேட்பார் இன்றி இருக்கிறது என்றார்..

விவசாயிகளின் வசித்து வருவது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் இதனால் இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் காத்திருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட அனைத்து விலைகளும் உயர்ந்து உள்ளது.இந்நிலையில் பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஸ்டாலின் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 21 Dec 2020 6:20 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  3. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  4. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  6. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  10. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...