அடுத்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழக போக்குவரத்து துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்தது. அந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் எழிலகம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், துணை ஆணையர் நடராஜன் மற்றும் பணம் சரிபார்க்கும் அவரது உதவியாளர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.
போக்குவரத்து துறை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை நடராஜன் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அந்த சோதனையை நடத்தியது. தொடர்ந்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகின. ஆனால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் சென்னையில் போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வரும் நடராஜன் திருநெல்வேலிக்கு மாற்றி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் போக்குவரத்துத் துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜனுக்கு எதிராக லஞ்ச புகாரில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டபோது, செய்தியாளரின் கேமராவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தட்டிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu