மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது
X

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று மிதமான மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்தது

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்துவருகிறது.

மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, ஆக்கூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்வது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture