/* */

மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் குடிநீர், மின்சாரம் இல்லாததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்வதால் ஆனந்தகுடி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குறைந்த மின் அழுத்தும் ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் மின்சாரம் முழுமையாக இல்லாததால் பொதுமக்கள் மின்சார வசதி, குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்து உள்ளனர். அதிகாரிகளுக்கு பலமுறை தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், மயிலாடுதுறை - காளி சாலையில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிப்பு அடைந்தது. பள்ளி மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 22 Oct 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்