மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன் நாகபல்லக்கில் வீதியுலா

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன் நாகபல்லக்கில் வீதியுலா
X

மயிலாடுதுறை அருகே நாகபல்லக்கில் நல்லநாயகி அம்மன் எழுந்தருளினார்.

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன் நாகபல்லக்கில் வீதியுலா வந்தார்.

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான மணக்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த நல்லநாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி உற்சவம் கடந்த 29ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய விழாவான இன்று நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீநல்லநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீபொறையான் சிறப்பு அலங்காரத்தில் நாக பல்லக்கில் எழுந்தருளினர்.

தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. கிராமமக்கள் பல்லக்கை தோள்களில் தூக்கி மணக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீதியுலாவாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture