கொரோனா கட்டுப்பாடு: மயிலாடுதுறை பகுதி கோயில்கள் மூடல்

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் கடைசி 3 நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிலில், நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், பரிமள ரெங்கநாதர் ஆலயம், திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெரிய கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை மூடப்பட்டு பக்தர்கள் இன்றி நித்தியபூஜை மட்டும் நடைபெறுவதால், கோவில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu